twitter facebook rss

,

மலேசிய விமானம் விழுந்த இடத்தில் இருந்து 181 சடலங்கள் மீட்பு

மலேசிய விமானம் விழுந்த இடத்தில் இருந்து 181 சடலங்கள் மீட்பு


கீவ்,

மலேசிய விமானம் விழுந்த இடத்தில் இருந்து 181 சடலங்களை உக்ரைன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. அந்த விமானம், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் ஆகும். ரஷிய எல்லைக்குள் நுழைவதற்கு 40 கி.மீ. தூரத்துக்கு முன்பே இச்சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில். விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகி விட்டனர்.

உக்ரைனில் மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது. விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் உக்ரைன் அரசு–கிளர்ச்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மலேசியா விசாரணை குழு சிறப்பு விமானத்தில் உக்ரைன் விரைந்ததுள்ளது என்று மலேசிய பிரதமர் நஜிப் ராசக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மலேசியா அரசு உக்ரைனுக்கு சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பியுள்ளது. மலேசியா பேரழிவு உதவி மற்றும் மீட்பு குழு, மருத்துவ குழு அந்த விமானத்தில் சென்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோவிடம் பேசியுள்ளதாக நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உக்ரைன் அதிபர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார் என்றும் மலேசியா விசாரணை குழு உக்ரைன் விரைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களிடம் உக்ரைன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ உறுதி செய்துள்ளார் என்றும் மீட்பு பணிக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஒரு முழுமையான மற்றும் வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். "சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் நான் நெருக்கமாக அறிக்கைகளை கண்காணித்து வருகிறேன். இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான சர்வதேச விசாரணை தேவை தெளிவாகியுள்ளது” என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம், கிரபோவோ என்ற கிராமம் அருகே விழுந்தது. உக்ரைன் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 181 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. விமானத்தின் சேத பகுதிகள், 20 கி.மீ. சுற்றளவுவரை சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்பு குழுவினர் எடுத்துள்ளனர். இதற்கிடையே உக்ரைன் அரசு தான் இதற்கு காரணம் என்று ரஷியா அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். 

0 comments

Readers Comments

You can find 10 th result Accounting, Anna university news, Bank exam study materials, Bank jobs, Biotechnology, Campus interview Tips, Daily GK Updates, Diploma Result, English study materials, Experince job, Fresher jobs, Government jobs, jobs in Dubai, jobs in gujarat, Jobs in Hyderabad, jobs in kolkata, jobs in mumbai, jobs in noida, jobs in Pune, latest news, Mobile tricks, Off-campus, SSC recruitment, TNPSC Group 2 Question Papers, Walk in in this blog.

Contact Form

Name

Email *

Message *

Latest Posts